சென்னை: ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின், படிப்படியாக நீதிமன்ற பணிகளை துவங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளிடம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24ம் முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நீதிமன்றங்களின் வழக்கமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும், நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தனர். இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் பட்சத்தில் நீதிமன்ற பணிகளை படிப்படியாக துவங்குவது தொடர்பாக கருத்துகளை அனுப்பி வைக்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், புதுச்சேரி முதன்மை நீதிபதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.