மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சோலாப்பூர் எஸ்.பி.எம் பள்ளி முகாமில் தங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படுவதாகவும், உணவு மற்றும் சுகாதாரப் பிரச்னைகளைச் சந்திப்பதாகவும், அவர்களது குறைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறும் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு டிவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, இதுகுறித்து தனது அலுவலகம் மூலமாக துணை ஆணையரை தொடர்புகொண்டு விசாரித்ததில் அவ்வாறான பிரச்னைகள் இல்லையென்றும், இருப்பினும் இப்பிரச்னையை கூர்ந்து நோக்கி, தமது மாநிலத்தில் யாரும் சிரமத்திற்கு ஆளாகாமல் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து உத்தவ் தாக்கரேக்கு நன்றி தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், அன்புக்குரிய உத்தவ் தாக்கரேக்கு நன்றி. விரைவாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுக்கள். இந்த நெருக்கடி உள்ளவரை உங்களுடைய ஆதரவை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: