வாஷிங்டன்: கொரோனா வைரசை கட்டுப்படுத்த மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி பிடியை தளர்த்துமாறு, பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கடந்த மார்ச் 25ம் தேதியன்று ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்த மருந்துதான் தற்போது அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சில ஏற்றுமதிகளை சிறப்பு அடிப்படையில் அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தனது தினசரி செய்தி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘நான் இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன்.