ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர், அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையுடன் தீப ஒளியேற்றம் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10-வது நாளான கடந்த 3-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார். அப்போது, ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர். சிலர் பட்டாசுகள் வெடித்து ஒற்றுமையாக கொரோனாவை எதிர்கொள்வோம் என்பதை வெளிப்படுத்தினர். அதன்படி பாஜக அமைச்சர்கள் பல் பேர் விளக்கேற்றினர். ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது இல்லத்தில் ஒளியேற்றினார். தமிழகத்திலும் பல்வேறு அமைச்சர்கள், பொதுமக்கள் விளக்கேற்றினர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் விளக்கேற்றினர்.

Related Stories: