கொரோனா சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிக அளவில் சோதனைகள் செய்யப்பட்டால்தான், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களையும், சந்தேகத்துக்குரியவர்களையும் உரியமுறைப்படி கண்காணிப்புக்குட்படுத்தி சமூகப் பரவல் என்கிற மூன்றாவது கட்டத்தை எட்டாமல் நாம் தடுக்க முடியும். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு சோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories: