புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சரியான நேரத்தில் அரசு நல்ல முடிவு எடுத்திருக்கிறது என்று கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் தினமும் தங்கள் அனுபவங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு குறித்து செதேஷ்வர் புஜாரா கூறியதாவது: கொரோனா வைஸ் பரவலை தடுக்க அரசு சரியான நேரத்தில் ஊரடங்கு என்ற நல்ல முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாட்டில் கொரோனா தொற்றை தடுப்பது எளிதல்ல. அதனால் ஊடரங்கு தான் சரியான நடவடிக்கை.