தமிழக தொழிலாளர்கள் குறைகளை தீர்க்க மகாராஷ்டிர முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழக தொழிலாளர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  மகாராஷ்டிர மாநில முதல்வரே, சோலாப்பூர் எஸ்.பி.எம் பள்ளி முகாமில் தங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படுவதாகவும், உணவு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைச் சந்திப்பதாகவும் புகார் எழுப்புகின்றனர். அவர்களது குறைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: