சேலம்: சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரியா. இவரது மகள் நேத்ரா (7). இவர், சேலத் தில் உள்ள இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். சர்வதேச ஸ்கேட் டிங் வீராங்கனையான நேத்ரா பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதுதவிர குதிரை ஏற்றம், நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். நேத்ரா பள்ளி விடுமுறை நாட்களில் ஏற்காடு மலைப்பாதையில் சென்று அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் மற்றும் காய்கறிகள் வழங்குவது வழக்கம். தற்போது 144 தடை உத்தரவால், ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்கள் ஏதும் சொல்லவில்லை. இதனால் குரங்குகள் உணவுக்கு பரிதவித்து திரிந்து கொண்டிருக்கிறது.