மதுரையில் சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி: ஆட்சியர் வினய்

மதுரை: சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்து ஆட்சியர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சரக்குகளை மறுநாள் காலை 6 மணிக்குள் அனுப்பிட வேண்டும். மதுரை சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: