சென்னை: தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால் பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வருவதால் நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை தவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக இருந்தது.