சென்னை : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 60 லிட்டர் வரை கிருமிநாசினியை தெளிக்கும் வகையில், பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 16 மணி நேரம் இயங்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகரில் வடக்கு மாதேவி சாலையில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் கிருமிநாசினி தெளிப்புப் பாதையை அமைத்துள்ளது.