காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சுட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்ரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டிறியப்பட்டது. மேலும் இன்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்பு படையினரக் கண்டதும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்ட தொடங்கினர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி அளித்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொதுமக்கள் மூவரைக்கொன்ற பயங்கரவாதிகள் இவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: