தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்துள்ளார் என கூறினார். அதனால் 25-03-2020 முதல் 01-04-2020 வரை சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் தங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரம்ம இருந்தால் தெரிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் மருத்துவ உதவிக்கு கீழ் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை எணகளுக்கு அழைக்கவும் எனவும் அறிக்கையில் தெரிவித்தார்.