அமெரிக்காவில் அடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. ஒரே நாளில் 1,480 பேர் மரணம்.. பலி எண்ணிக்கை 7,402 ஆக உயர்வு

வாஷிங்டன் : அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,480 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 39,391 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,480 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 7,402 ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் 277,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 12,283 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 257,790 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  5,787 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.இந்நிலையில், அமெரிக்காவில் வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் கொரோனா பரவிய பிறகு, ஒரே நாளில் அதிக அளவில் ஏற்பட்ட உயிரிழப்பு இதுவாகும். இதற்கு முன்னர் இத்தாலியில், ஒரே நாளில் 969 பேர் உயிரிழந்ததே அதிக எண்ணிக்கையாக இருந்தது.

Related Stories: