சென்னை: கோவையில் மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக இளம்பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். டெல்லி சென்று வந்ததால் சேலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீரென இறந்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகள் சங்கீதா(20). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. காய்ச்சல் அதிகமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் சங்கீதாவை அவரின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பினால் உயிரிழந்தார். நேற்று இளம்பெண் சங்கீதா உயிரிழந்துள்ளனர்.