பிரதமர் மோடி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா? திருமாவளவன் கேள்வி

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  ஊரடங்கால் நாடெங்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு கருவிகள் இல்லை.  அதைப்பற்றி ஏதேனும் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவை எதைப்பற்றியும் பேசாமல், ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் ‘மின் விளக்கை அணையுங்கள், டார்ச் அடியுங்கள்’  என்று அறிவித்திருப்பது பிரதமர் இந்த நாட்டில்தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் மாய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறாரா என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. அவரது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் மூத்த அமைச்சர்கள் கூட மக்களை கேலி செய்யும் விதமாகவே அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

Related Stories: