சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியதாவது: பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாட்டுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழை மக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என. ஆனால், நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்று தான் வருகிறார்.