சென்னை: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய இந்த இக்கட்டான காலகட்டத்தில் வீட்டிற்குள்ளேயே பசியும் பட்டினியுமாக உள்ள ஏழை மக்கள், வியாபார பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என்று பல தரப்பட்ட மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு தொலைபேசி எண்ணை வழங்கி, அதன் மூலம் மிகச் சீரிய முறையில் உதவிகளை வழங்கி வருவது போற்றத்தக்க ஒன்றாக உள்ளது.