சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸின் அபாயத்தை பொதுமக்கள் புரிந்து நடக்க வேண்டும். மேலும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.