டெல்லி: விசா நிபந்தனைகளை மீறி தப்லிகி ஜமாஅத் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 960 வெளிநாட்டினரை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அவர்களின் விசாக்களை ரத்து செய்தது. இந்த வெளிநாட்டினர் தற்போது வசித்து வரும் மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களிடம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. டெல்லியை அடுத்துள்ள, நிஜாமுதீனில் நடந்த தப்லிக் - இ - ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களில 400-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.