திருச்சி: தமிழகத்தில் ரேஷன் விநியோகத்திற்காக மத்திய பிரதேசம் போபாலில் இருந்து 2,600 டன் கோதுமை சிறப்பு சரக்கு ரயில் மூலம் நேற்று திருச்சி குட்ஷெட்க்கு வந்தது.
47 வேகன்களில் வந்த சரக்கு ரயில் பெட்டிக்கு முதலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்கள் லாரிகளில் கோதுமை மூட்டைகளை அடுக்கினர்.