பணகுடி: 144 தடை உத்தரவு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள பிராய்லர் கோழி பண்ணைகளுக்கு கோழி தீவனம் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பணகுடி பகுதியில் பண்ணைகளுக்கு நாமக்கல் பகுதி பண்ணைகளில் இருந்து கோழி குஞ்சுகள் தரப்படுகின்றன. அவைகளுக்கு தினமும் தீவனம் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு 40 நாளில் கறிக்கு உகந்த கோழிகளாக வளர்த்து கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது தீவனம் வருவது தடைபட்டுள்ளதால் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், இரையின்றி தவிக்கின்றன. இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், பணகுடி, வடலிவிளை, காவல்கிணறு, தளவாய்புரம், பாம்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.