அதிராம்பட்டினம்: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக அதிராம்பட்டினம் அருகில் உள்ள கிராமத்தில் செக்போஸ்ட் அமைத்து ஊருக்குள் நுழைய கிராம மக்கள் தடை விதித்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ளது பழஞ்சூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதி கிராம நிர்வாகத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக ஊரின் நுழைவு வாயிலில் செக்போஸ்ட் அமைத்து அந்த இடத்தில் போவோர், வருவோரை தணிக்கை செய்து வருகின்றனர்.