கொரோனா வைரஸ் சிறப்புப் பிரிவில் பணிக்கு வராத ஒப்பந்தப் பணியாளர்கள் 54 பேர் பணி நீக்கம் : புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரி  : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் சிறப்புப் பிரிவில் பணிக்கு வராத ஒப்பந்தப் பணியாளர்கள் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைக்காக தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேலைக்கு அமர்த்திய ஒப்பந்த பணியாளர்கள் 200 பேரையும் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற அறிவுறுத்தியிருந்தனர். இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பணிக்கு வராத ஊழியர்கள் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ கல்லூரி நிர்வாகம் அளித்த அறிக்கையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அருண் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிப்பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் 24 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.ஒப்பந்த பணியாளர்கள் வேலைக்கு வராததால் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக 54 பேர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: