புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் சிறப்புப் பிரிவில் பணிக்கு வராத ஒப்பந்தப் பணியாளர்கள் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைக்காக தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேலைக்கு அமர்த்திய ஒப்பந்த பணியாளர்கள் 200 பேரையும் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற அறிவுறுத்தியிருந்தனர். இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பணிக்கு வராத ஊழியர்கள் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.