கொரோனா வைரஸ் தொற்று பரவலில் அறிவியல் உண்மையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி அருகில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 8 முதல் 10 வரை நடந்த திப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தாங்களே முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு நாட்டின் எல்லைகளோ, மத, சாதி, மொழி அடையாளங்களோ, கட்சி சார்பு நிலையோ காரணம் இல்லை என்ற அறிவியல் உண்மையினை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.ஜனவரி முதல் தேதியில் இருந்து வெளிநாடுகள் சென்று திரும்பியோர், வெளிநாட்டு வேலையில் இருந்து ஊர் திரும்பியவர்கள், விடுப்பில் ஊர் வந்து திரும்ப செல்ல வேண்டியோர் அனைவரும் தாங்களே முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு போராட்டத்தில் நாடு வெற்றி பெற உதவிட வேண்டும்.

Related Stories: