வெறுப்பு பிரசாரம் வேண்டாம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளிட்டுள்ள அறிக்கை:. தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இதனை முன்வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரான வெறுப்புப் பிரசாரத்தை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. இந்த இக்கட்டான சூழலிலும் மதம் சார்ந்த வெறுப்புப் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: