தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தாளமுத்து நகர் அருகே உள்ள பெரிய செல்வ நகர் பகுதியில் வின்செண்ட் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பீரோவை உடைத்து, 100 சவரன் நகைகள் மற்றும் 20,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை என தகவல் வெளியாகியுள்ளது.