சென்னை: ஸ்ரீதரன் என்பவர், சென்னை ராஜ்பவன் அருகே கடந்த 15.5.2009 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் அவரது இடது கால் உடைந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருந்தும், சில நாட்கள் கழித்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், மீண்டும் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். இதற்காக மொத்தம் ₹1 லட்சத்து 50 ஆயிரத்து 491 செலுத்தியுள்ளார். இதில் 68 ஆயிரம் இன்சூரன்ஸ் கொடுத்துள்ளனர்.சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகும் கால் வலி சரியாகவில்லை. இதனால், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இம்ப்ளான்ட் சிகிச்சை சரியாக செய்யவில்லை, எலும்பு சரியாக கூடவில்லை. இதனால், நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, என்று கூறி மீண்டும் புதியதாக நான்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.