சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோயானது நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் டெல்லியில் நடந்த ஜமாத் மாநாட்டிற்கு சென்றவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. இந்த சூழலில் மாநாட்டிற்கு சென்றவர்களில் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம். அந்த மாநாட்டில் பங்கேற்ற பலர் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்ற தகவலும் வருகிறது. எனவே, டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.