சிட்னி :ஆஸ்திரேலியா 2 கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து, விலங்குகளிடம் சோதித்து வருகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக மனித குலத்திற்கு உள்ளது.சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை எட்டியுள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள நிலையில், 9.5 லட்சம் மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான நாடுகளும் சமூக விலகல் மற்றும் ஊரடங்கை பிறப்பித்து, மக்களை வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தி வருகின்றன. இருந்தும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் அதிகாரபூர்வமாக மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், மருத்துவ உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.