சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா வைரஸ் நோய்க்கு சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் இல்லை. .
மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதை அனைவரும் அறிவோம். கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி வருகின்ற வேளையில் உதவிகள் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை தவறான செய்திகளை பரப்பி உபத்திரம் செய்ய வேண்டாம். தமிழகம் முழுவதும் நாடோடிகளாக வாழ்கின்ற நரிக்குறவர்களுக்கும், கலைக்கூத்து கலைஞர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.