சொல்லிட்டாங்க...

ஊரடங்கால் வேலையிழந்த 8 கோடி கிராமப்புற ஏழை தொழிலாளர்களின் நலன் கருதி, 21 நாள் கூலியை மத்திய அரசு  முன்பணமாக வழங்க வேண்டும். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

பிரதமர் மோடி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என கொரோனா நிவாரண உதவி திட்டத்துக்கு பெயர் சூட்டி இக்கட்டான தருணத்திலும் சுய விளம்பரம் தேடுகிறார். - மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான்

டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்கள் திட்டமிட்டு எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. - மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி

வங்கிகளில் கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ள நிலையில் தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபடுவது முறையல்ல. - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: