மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம்: கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எச்சரிக்கை கடிதம்

சென்னை: கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பதுதான் விவேகமானது என்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் கூறியதாவது; வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸின் பலத்தை அதிகரிக்கிறோம். பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவுறுத்தல் கூறியுள்ளார். கொரோனாவை குறைத்து மதிப்பிட்டதால் தான் வளர்ந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தால் நாம் மறைவாக இருப்பதே விவேகமானது என்பதை உணர வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கிடைத்தாலும் வரும்காலம் கடினமாக இருக்கும். தனித்திருந்து மனதை அடக்கி வெற்றி காண்பதற்கு வேறெந்த வெற்றியும் ஈடாகாது. அதிகப்பற்றமாக இத்தாலியில் 12,428, ஸ்பெயினில் 9,053, அமெரிக்காவில் 4,056, பிரான்சில் 3,523 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஊரடங்கை மீறி நடமாடுவோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: