கொழும்பு: கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசு மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கையிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தோற்றால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அடுத்த 2 வாரங்கள் அபாயகரமான காலகட்டம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.