நியூயார்க் : கொரோனா வைரஸ் பாதிப்பு 2ம் உலக போருக்கு பிறகு உலக நாடுகள் சந்திக்கும் சவாலான நெருக்கடி என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 202 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,35,587 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,56,917-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர்.