திருச்சி: திருச்சி, புதுகையில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பூ க்களை வாங்க வியாபாரிகள் இல்லாததால் செடியிலேயே கருகும் அவல நிலை உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பூக்களை வாங்க வியாபாரிகள் இன்றி செடிகளிலேயே கருகி வருவதால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் போதாவூர், புலியூர், போசம்பட்டி, எட்டரை, கோப்பு போன்ற பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் மல்லிகை பூ, விருச்சி பூ, செவ்வந்தி பூ போன்ற பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது.