கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது...வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான செய்திகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி, முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பகிரப்படுகிறது. ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதன்பிறகும் கொரோனா தொடர்பான போலி செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் இறைச்சி விரும்பிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்க தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது எனவும், மீண்டும் வீண் வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழி, முட்டை, குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது எனவும் அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது என கூறியுள்ளது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத தேவையில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: