கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி; முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக அறிவித்தார் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

பெங்களூரு: உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 124 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார  பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில்,    குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை   சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும்,’ என கூறியுள்ளார். அதனை போல், மாநில அரசுகளும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி பொருள் உதவி அளிக்க வேண்கோள் விடுத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கும் அந்தந்த மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பி.எஸ்.  எடியூரப்பா வெளியிட்ட வீடியோவில், நாம் அனைவரும் கடந்து செல்லும் மிகவும் கடினமான நேரம் இது. இந்த தொற்றுநோயை நாம் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது முக்கியம். தனிப்பட்ட முறையில், எனது ஒரு வருட சம்பளத்தை #CMRF Covid19 க்கு நன்கொடை செய்கிறேன். நீங்கள் அனைவரும் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவுக்கு உதவுங்கள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: