ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் கொரோனாவிற்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர். ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் மாதவன்(33). இவர் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறி கட்டணமாக ₹400 முதல் ₹500 வரை வசூலிப்பதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் மற்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கான தொடர்பு அதிகாரி பிரகாஷ் ஐயப்பன் ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருத்துவமனையில் இருந்த மாதவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.