சென்னை: ஊரடங்கையும் மீறி சென்னை அடுத்த பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மூன்று புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.