மதுபானம் கிடைக்காததால் தொழிலாளி தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் விநாயகபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் (37). கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், குடிப்பழக்கம் உள்ளவர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டுள்ளன. மது அருந்த முடியாமல் சில தினங்களாக விரக்தியில் இருந்த வீரபத்ரன்,  நேற்று மாட்டுமந்தை மேம்பாலத்திற்கு சென்று, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு அங்கிருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: