ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா.. பாதித்தோர் எண்ணிக்கை 1547 ஆக உயர்வு.. இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் தமிழகம் 3ம் இடம்

டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 146 பேருக்கு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1547 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியானதால் 234 பேர் பாதிப்புடன் கேரளா முதலிடத்திலும், 216 பேர் பாதிப்புடன் 2ம் இடத்தில் மகாராஷ்த்திராவும் உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 127ஆக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் 3வது இடம் ஆகும்.

இந்தியாவில் இதுவரை 1,400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 124 பேர் குணமாகிவிட்ட நிலையில், 35 பேர் உயிரிழந்துவிட்டனர். இதன்படி மராட்டியத்தில் 10 பேர், குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 6 பேர், மத்தியப் பிரதேசத்தில் 5 பேர், பஞ்சாப்பில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கத்தில் தலா 2 பேர், ஹிமாச்சல பிரதேசம், தமிழகம், பிஹாரில் தலா ஒருவர் என 35 பேர் பலியாகி உள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ராணுவ மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 30 ராணுவ அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: