சென்னை: மலேசியவை சேர்ந்தவர் யோகலிங்கம் (72). இவரது மனைவி ரஞ்சிதம் (70), வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற வந்தார். பின்னர் ராயப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மூதாட்டி ரஞ்சிதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து யோகலிங்கம் ஓட்டல் ஊழியருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி ஓட்டல் ஊழியர்கள் சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.