சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசின் சார்பில் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதனால் இன்று முதல் வழக்கம் போல கல்வி நிறுவனங்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.