சென்னை: அம்மா உணவகத்தில் உரிய இருப்பு உள்ளதா என்பது குறித்தும், உணவின் தரம், சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினேன் என சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாக கூறினார். அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.