சென்னை: 144 தடை உத்தரவால் மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவாரமாக பனி மற்றும் கொளுத்தும் வெயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவுப்படி தற்போது சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 166 இடங்களில் கடந்த 7 நாட்களாக போலீசார் தற்காலிக வாகன சோதனைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.