சென்னை: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரண பணிகளுக்காக தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய பணிகளை மத்திய அரசு, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல தரப்பினரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இந்தி நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தெலுங்கு நடிகர் பிரபாஸ், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 3 கோடியும் தெலங்கானா, ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும் என மொத்தமாக 4 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு நிவாரண பணிக்கு டோலிவுட், பாலிவுட் நடிகர்கள் நிதியுதவி
- பாலிவுட் நடிகர்கள் ஸ்பான்சர்ஷிப்
- கொரோனா தடுப்பு நிவாரணப் பணி டோலிவுட்டுக்கான கொரோனா தடுப்பு நிவாரணப் பணி