புதுடெல்லி: மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நூறு சதவீத காட்டன் துணியின் இரண்டு அடுக்குகள் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்படும் முகக் கவசம் கொரோனா வைரசை விட சிறிய வகை வைரசைக் கூட 70 சதவீதம் கட்டுப்படுத்த கூடியது. வீடுகளில் இருக்கும் பயன்படுத்தாத பழைய பனியன், டி-சர்ட், கைக்குட்டை ஆகியவற்றைக் கொண்டு இவற்றை தயாரிக்கலாம். முகக் கவசம் தயாரிப்பதற்கு முன் இவற்றை உப்பு கலந்த நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.