ஊரடங்கு உத்தரவால் தவித்த ஏழைகளுக்கு உணவளித்தார் நடிகை ரகுல் பிரீத் சிங்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாமல் பசியால் தவித்த ஏழைகளுக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் உணவளித்தார். என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் 14ம் தேதி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஏழைகள் பலர் உணவின்றி தவிப்பதாக ரகுல் பிரீத் சிங் கேள்விப்பட்டார். இதையடுத்து தனது உதவியாளர்களை அழைத்து அந்த மக்களுக்கு உதவ முடிவு செய்தார்.  200 பேருக்கு உணவினை தயார் செய்து அவர் அனுப்பி வைத்தார். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கும் உணவளிக்க ரகுல் உதவியிருக்கிறார்.

Related Stories: