சென்னை: ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாமல் பசியால் தவித்த ஏழைகளுக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் உணவளித்தார். என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் 14ம் தேதி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.