மும்பை: கொரோனா தொற்று தடுப்பு, நிவாரண பணிகளுக்காக கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா ₹80 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளார். கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. பிரதமர் பாதுகாப்பு நிதி, மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்படுகின்றன. இதற்கு தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர். இதுவரை விளையாட்டு வீரர்களில் அதிகபட்சமாக கிரிக்கெட் வீரர் ரெய்னா 52லட்சம், கங்குலி, சச்சின், கம்பீர் ஆகியோர் தலா ₹50 லட்சம் தருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா 80 லட்சத்தை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு வழங்க உள்ளார்.